வியாழன், 7 ஆகஸ்ட், 2014

சக்தி பீடம்-சாரதா பீடம்



சாரதா பீடம்

சாரதா பீடம் மற்றொரு சக்தி பீடம் ஆதி சங்கரரால் விவரிக்கப்பட்டுள்ள 18 மகா சக்தி பீடங்களில் உள்ளது. இது இப்போது பாகிஸ்தானால் கையக ப்படுத்தப்பட்டுள்ள (POK ) காஷ்மீரப் பகுதியில் உள்ளது . இத் திருக்கோயில் உள்ள இடம் தேவியின் வலது கை விழுந்த இடம் என வர்ணிக்கப்படுகிறது. இன்று மிகவும் சிதலமடைந்து காணப்படுகிறது. அனால் ஒரு காலத்தில் இங்குதான் ஒரு பெரிய சமஸ்க்ருத நூலகம் இருந்திருக்கிறது.. இன்று "பாரமுல்லா" விலிருந்து 96 கி மீ தொலைவில் "நீலம்" பள்ளத்தாக்கில் 11000 அடி உயரத்தில் உள்ள இந்த பீடம் உள்ள இடமே சாரதா கிராமம் என்று அழைக்கப்படுகிறது. சீன யாத்ரிகர் "யூவன் சாங்" சி.632ல் இங்கு இரண்டு ஆண்டுகள் தங்கி இருந்திருக்கிறார் . மேலும் இஸ்லாமிய யாத்ரிகர் "அல் பருனி " மற்றும் அக்பரின் அமைச்சர் "அபுல் பாசல்" அவர்கள் சாரதா பீடத்தை தங்கள் எழுத்துக்களில் குறித்திருக்கிறார்கள். ஆதி சங்கரர் மற்றும் இராமானுஜர் இங்கு வந்து இருந்ததாக கூறப்படுகிறது. சமீப காலம் வரை இந்த இடம் கஷ்மிர பண்டிதர்களின் முக்கிய இருப்பிடமாக இருந்தது. இவ்வளவு பிரபலமான சக்திபீடத்தில் இன்று ஓரிரு ஹிந்துக்களே உள்ளனர் என்பது வருத்தப்படகூடிய செய்தியாகும். ஆனால் சமீப காலத்தில் தங்கள் கலாசாரத்தில் பற்றுள்ள சில கஷ்மீர இஸ்லாமிய சகோதரர்கள் இத்தலத்தை புதிப்பிக்க அரசாங்கத்துடன் கலந்து முயற்சி எடுத்துள்ளனர்.

ப்ரஹ்மண்யன்,

சக்தி பீடங்கள்



ஹிங்லாஜ் சக்திபீடம்:

ஹிங்லாஜ் சக்தி பீடம் இன்றைய பாக்கிஸ்தானத்தில் உள்ளது . இது பலூசிஸ்தான் மாநிலத்தில் லியாரி தாஹ்சிலில் உள்ள "கனராஜ்" மலைத்தொடரில் உள்ள ஓர் திறந்த குஹையில் உள்ளது. அருகிலேயே "ஹிங்கோல் " நதி ஓடுகிறது. இது சதி தேவியின் நெற்றி தெறித்த இடம் (ஹிங்குல் - கும்குமம்) என கொண்டாடப்படுகிறது. இந்த சக்தி பீடம் ஒரு காலத்தில் மேற்கு, வடமேற்கு இந்தியாவில் உள்ள ஹிந்துக்களால் விசேஷமாக கொண்டாடப்பட்டு வந்தது . அன்றைய கால கட்டத்தில் பலுச்சிஸ்தானத்தில் அரசு வகித்த "பானுசாலி" ( பன்சாலி ) என்ற சூரிய வம்சத்து ஹிந்து அரசர்களின் குல தெய்வமாக ஆராதிக்கப்பட்டு வந்தது. இன்றும் ப்ரஹ்ம க்ஷத்ரியர், பவசர் க்ஷத்ரியர், பன்சாலி என்ற பல க்ஷத்ரிய வம்சத்தினருக்கு குலதெய்வமாக போற்றப்படுகிறது. இந்த இடம் ஒரு மணல் பாங்கான பாலைவனத்தின் மத்தியில் உள்ளது. மலைத்தொடரில் ஆசிய கண்டத்தின் மிகபெரிய வறண்ட மணல் எரிமலை இருக்கிறது . இப்போது வறண்டு மணலும் சேரும் தான் சேர்ந்திருக்கிறது.
ஹிங்லாஜ் சக்திபீடம் கராச்சியிலிருந்து 250 கி மீ தொலைவில் உள்ளது. இங்கு செல்ல யாத்ரிகர்களுக்கு பாகிஸ்தான் அரசு எல்லா சௌகரியங்களையும் செய்து இருக்கிறது. தவிர ஹிங்க்லாஜ் சேவா மண்டலி என்ற அமைப்பு உலகில் பல்வேறு இடங்களிலிருந்து வருடம் இருமுறை கொண்டாடப்படும் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்து வருகிறது.இத்திருத்தலத்தை அங்கு இருக்கும் மக்கள் (முஸ்லிம் மதத்ததை சேர்ந்தவர்கள்) நானி கா மந்திர் (பாட்டியின் கோயில்) என அன்புடம் கூறுகிறார்கள். இத்தலம் அவர்கள் பாதுகாப்பில் தான் உள்ளது.

ப்ரஹ்மண்யன்