வெள்ளி, 24 டிசம்பர், 2010

நினைத்துப்பார்க்கிறேன்

நினைத்துப்பார்க்கிறேன்


சிறுவயதில் நான் படித்த தமிழ்ப் பத்திரிகை உலகிலும் மற்றும்புத்தகங்களிலிருந்தும் எனது நினைவில் நிற்கும் சில படைப்புகள் பற்றி இங்குஎழுத விரும்புகிறேன். எங்கள் வீட்டில் "ஆனந்த விகடன்" வெகு நாட்களாகவாங்கிக்கொண்டிருந்தோம் . ஆக ஆசிரியர் "கல்கி" அவர்களின் படைப்புகள்எனக்கு மிகவும் பரிச்யமான ஒன்று. அந்நாட்களில் கல்கி அவர்கள் நகைச்சுவைகலந்த நடையில் பல கதை, கட்டுரை எழுதிவந்தார். ஆனால் அவரது சரித்திரகதைகள்தான் என்னை ஈர்த்தன . முக்கியமாக பார்த்திபன் கனவு, சிவகாமியின்சபதம், பொன்னியின் செல்வன், இவற்றை பலமுறை படித்துள்ளேன். கல்கிஅவர்களின் தமிழ் நடை படிப்பவர்களுக்கு இனிமையாக இருக்கும். வாசகர்களைதன்னுடன் அழைதுச்செல்வார். படிக்கும்போதெல்லாம் அவருடன் சேர்ந்துசரித்திரகாலத் தமிழகத்தில் பயணித்து இருக்கிறேன். அவரது கதைகளைப்படிக்கும்போது நாம் அவருடன் கூட இருந்து நடப்புகளை பார்ப்பது போன்ற ஒருபிரமையை உண்டாக்குவார். அவரது ஹாஸ்யம் மிகவும் நுண்மையானது (subtle ). கல்கி அவர்களின் தியாக பூமி, மகுடபதி அவரது தேசபக்தியை வெளிப்படுத்தின. கணையாழியின் கனவு, கள்வனின் காதலி, மோகினித்தீவு, பொய்மான் கரடுஇன்றும் எனது மனதில் இருக்கும் புதினங்கள். அவரது சிறுகதைகள் பலவற்றைபடித்து அனுபவித்து இருக்கிறேன். "கர்நாடகம்" என்ற புனைப்பெயரில் அவர்எழுதிய இசை, நாடக விமரிசினங்களை மறக்கமுடியாது. ஆனால் அவரதுமேடைப்பேச்சுகள் எனக்கு மிகவும் ஏமாற்றமளித்தன.எழுத்தில் வல்லவர்கள்பேச்சில் வல்லவர்களாய் இருப்பதில்லை என்பதை புரிந்துகொண்டேன்

என் நினைவில் வரும் மற்றொரு பெரியவர் மகாமஹோபாத்யாய உ ..வே.சுவாமிநாத அய்யர் அவர்கள். தமிழ் மூதறிஞர் உ. வே. சுவாமிநாத அய்யர் "என்சரித்திரம்" என்ற அவரது சுய சரித்திரத்தை "ஆனந்த விகடனில்" எழுதிவந்ததைபடித்து மகிழ்ந்தேன். ஆனால் அவரது தமிழ் எனது இளவயதில் சரியாகபுரியாததால், சமீபத்தில் மற்றொருமுறை இப்பொழுது "என் சரித்திர"த்தை படித்துவருகிறேன். அற்புதமான புத்தகம், நம்மை அவரது காலத்திற்கு அழைத்துச்சென்றுவிடுகிறார் தமிழ்த்தாத்தா.அவரது குருபக்தி யும் தமிழ் ஆர்வமும் மற்றும்அவரது இடையுறா இலக்கிய சிந்தனையும், தேடுதலும் நம்மை வியப்புறசெய்கின்றன . மிகவும் ஏழ்மையான ஒரு தமிழ் பிராமணர் தனது வாழ்நாள்முழுவதையும் தமிழுக்காக எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி உழைத்ததைகாணும்போது மனதில் வியப்பும் வேதனையும் உண்டாகியது.


அதே காலகட்டத்தில் ஆனந்த விகடனில் பல பிரபல எழுத்தாளர்கள் எழுதிவந்தனர். அதில் முக்கியமா னவர்க்ளில் எஸ்.வி.வி என்றஎஸ்.வி.விஜயராகவாச்சரியார். எஸ்.வி.வி. யின் நகைச்சுவை இயற்கையானஒன்று. மற்றொருவர் பி ஸ்ரீ ஆச்சார்யா, இவர் வடமொழியிலும் தமிழிலும்நல்லறிஞர். இவரது "சித்ர ராமாயணத்தை" வெகுநாட்களுக்கு தொடர்ந்துவிகடனில் படித்து வந்தேன். நான் முறையாக கம்பராமாயணத்தை இவரதுஎழுத்துக்கள் மூலம் தான் அறிந்தேன் .இவரது ஆன்மீக கட்டுரைகள்அற்புதமானவை.

கல்கி அவர்கள் விகடனை விட்டு சென்று சொந்தமாக "கல்கி" வாரப்பதிப்பைஆரம்பித்தார். தொடர்ந்து "தேவன்" என்னும் R. மகாதேவன் "ஆனந்தவிகடன் " ஆசிரியர் பொறுப்பேற்றுக் கொண்டார்.இவரது படைப்புகளில் ஜஸ்டிஸ்ஜகந்நாதன், கோமதியின் காதலன், மிஸ். ஜானகி,ஸ்ரீமான் சுதர்சனம் மற்றும்கோமதியின் காதலன் அவருக்கு பெயர் சேர்த்தன . ஆனால் அவரது நகைச்சுவைகலந்த "துப்பறியும் சாம்பு" தொடர் தமிழ் வாசகரிடத்தில் ஒரு புதிய கலகலப்பைஉண்டாக்கியது . தேவன் எழுதிய "ஐந்து நாடுகளில் அறுபது நாட்கள்" என்றஅவரது தென்கிழக்காசிய பயண அனுபவங்கள் மற்றும் "ராஜத்தின் மனோரதம் " என்ற அவரது வீடு கட்டிய அனுபவங்கள் பற்றிய கட்டுரைத் தொடர்கள் மிகவும்ருசிகரமானவை. இளம் வயதிலேய காலமாகி விட்ட தேவன் நிறையஎழுதியிருக்கிறார். இவரது படைப்புகளைப்பற்றி தனியாகவே ஒரு கட்டுரைஎழுதலாம்.

"ஆனந்தவிகடன்" அளித்த, எனக்குப்பிடித்த மற்றொரு எழுத்தாளர் கொத்தமங்கலம் சுப்பு . இவர் ஓர் பிறவி மேதை. தான் கண்ட வாழ்க்கைகாட்சிகளை எளிய தமிழில் சிறுகதைகளாக அளித்தார் . சுப்பு அவர்கள் எழுதியதில்லானா மோகனாம்பாள் " அந்நாளைய வாசகர்களிடையே ஓர் புரட்சியைஏற்படுத்தியது. "தில்லானா மோகனாம்பாள் " திரைக்காவியமாக வடிக்கப்பட்டதுஅது தமிழ் திரைப்பட உலகில் இன்று வரை தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லபடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது .இவரது கதைகளில் இயற்கையானநகைச்சுவை மிளிரும் . இவரது கவிதை திறன் சாதாரண மக்களை அடைந்ததுசுப்பு அளித்த "காந்தி மகான் கதை " வில்லுப்பாட்டு வடிவில் பிரபல மானது.
ஆனந்தவிகடன் பல எழுத்தாளர்களை தமிழ் உலகிற்கு அளித்திருக்கிறது . அவர்களில் சிலர் சொந்தமாக பத்திரிகையை ஆரம்பித்தனர். சாவி & மணியம் முக்கியமானவர்கள். சா வி என்னும் சா விஸ்வநாதன் தனெக்கென்று தனி தமிழ் நடை கையாண்டு வெற்றிபெற்றவர். இவர் பல பத்திரிகைகளுக்கு மாறினார். வெள்ளிமணி ,தினமணி கதிர், கல்கி, விகடன் , குங்குமம் ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராக பணியாற்றினார். சொந்தமாக சாவி, பூவாளி, விசைகள், மோனா ஆகிய இதழ்களை நடத்தினார் .இவரது படைப்புகளில் நவகாளி யாத்திரை, வாஷிங்டனில் திருமணம், விசிறி வாழை மற்றும் நகைச்சுவைக் கதைகள் சிலவே எனது மனதில் நின்றன.

ஆனந்த விகடன் பல ஓவியர்களை அறிமுகப்படித்தியது நான் முதலில் பார்த்தது "மார்கன்" அவர்களது சித்திரங்களைத் தொடர்ந்து வர்மா அவர்கள் கல்கியின் கதைகளுக்கு படம் வரைந்தார். பிறகு மாலி என்ற மேதை (மகாலிங்கம்) ஆனந்த விகடனில் சேர்ந்தார் அவர் ஒரு சித்திரப் புரட்சியையே செய்தார் . அவர் சித்திரம், அரசியல் கார்ட்டூன் மற்றும் போட்டோ (நிழற்ப்படம்)நேர் காணல் என்று பல்வேறு துறைகளில் வல்லவர் . அவர் புதிய இளம் சிதிரக்கரர்களை ஊக்குவித்தார் . அவர் காலத்தில் விகடனில் சாமா, ரவி, சேகர், ராஜு,தாணு, சித்ரலேகா மற்றும் கோபுலு என்று பல புதிய சித்திரக்காரர்கள் விகடனில் சேர்ந்து படங்கள் வரைந்து வந்தனர்.
இதே காலகட்டத்தில் சிற்பி என்ற ஸ்ரீநிவாசன் ஆனந்தவிகடனில் தென்னாட்டு செல்வங்களை தனது துரிகயால் பதிவெடுத்து படங்கள் வரைவதில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தினார் .மிக அற்புதமான படைப்புகள். தென்னாட்டுக் கோவில்களையும் அங்குள்ள சிற்பங்களையும் மிக நுட்பமாக ஓர் அணுவளவும் மாறாமல் பதிவெடுத்துக் கொடுத்தார் சிற்பி அவர்கள். இவரது படைப்புக்கள் காலத்தில் அழியாத பொக்கிஷங்கள் .
 .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக